Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

08:40 AM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியை ஒட்டியுள்ள கல்வராயன் மலையில் விஷச்சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன் வந்து இந்த வழக்கை வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.

தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, டிஜிபி எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து நேரில் சென்ற சிபிசிஐடி போலீசார் பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

Tags :
CBCIDHooch Liquorhooch tragedyHoochTragedyKallakkurichiSpurious Liqour
Advertisement
Next Article