Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

+2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

10:55 AM May 06, 2024 IST | Web Editor
Advertisement

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது.  90.47% தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில்,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

இந்நிலையில்,  பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தார் போல் இரண்டாம் இடத்தை ஈரோடும்,  சிவகங்கையும் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 97.42% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

இதே போன்று 97.25% தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதன்படி மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

மாவட்டம்                          தேர்ச்சி விகிதம்

மொத்தம் - 94.56%

புதுச்சேரி
93.38%

காரைக்கால்
87.03%

Tags :
12thResultnews7 tamilNews7 Tamil UpdatesPlus2Result 2024ResultsstudentsTamilNadutn schools
Advertisement
Next Article