Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

18வது மக்களவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றப் போவது யார்..? - இன்று வாக்கு எண்ணிக்கை!

05:47 AM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

18வது மக்களவைத் தேர்தல் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பது குறித்து இன்று முடிவுகள் வெளியாக உள்ளது.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  வாக்கு எண்ணிக்கை  இன்று நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும் வாக்குப்பதிவிற்காக 135 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதே போல 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.  1692 முறை வான்வெளியில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.  68,793 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டன. கிட்டத்தட்ட 1.5 கோடி தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கை :

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்..

“ வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  24 மணி நேரமும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படும்.  தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.  படிவம் 17 சி வழங்கப்பட்டுள்ளது.  தேர்தல் முடிவுகளை அங்கு அமைக்கப்பட்ட தேர்தல் முகவர்களிடம் காட்டப்படும்

படிவம் 20ல் தேர்தல் பார்வையாளர் கையொப்பமிடுவார்.  வாக்கு எண்ணிக்கை அதிகாரியும் அங்கு இருப்பார்.  ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் இதன் விவரங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும்.  ஐந்து வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் பொருத்தி பார்க்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும்

வாக்கு பதிவு எந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் செயல்பாடுகள் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும் நேரம் சரிபார்க்கப்படும். எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது என்ற விவரங்கள் முகவர்களுக்கு தெரிவிக்கப்படும். இவை வாக்கு எண்ணிக்கை அதிகாரியாலும் சரி பார்க்கப்படும் கட்சியின் பெயர் வாக்காளர் பெயர் என்ன அத்தனையும் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை சரியாக 8மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முதலாவதாக தபால் வாக்கு எண்ணப்படும். மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா. ஒடிசா போன்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதேபோல தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Election2024Lok sabha Election 2024Rajiv KumarVote Counting
Advertisement
Next Article