Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

17-வது ஐபிஎல் ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ரச்சின் ரவீந்திரா!

04:05 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.

Advertisement

துபையில் 17-வது  ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டில்லி கெபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும்  ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷர்துல் தாகூரின் அடிப்படை விலை  ரூ. 2 கோடி தெரிவிக்கப்பட்ட நிலையில், இவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முனைப்பு காட்டின. இறுதியாக ரூ. 4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.

மேலும், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் அடிப்படை விலை ரூ. 50 லட்சம் இருந்த நிலையில், 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Tags :
17th IPL auctionchennai super kingsDubaiRachin RavindraShardul Tagoreteam
Advertisement
Next Article