Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிலம்பம் பயிற்சியாளர் கைது!

07:55 AM May 29, 2024 IST | Web Editor
Advertisement

கோவில்பட்டி அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம்
பயிற்சியாளர் மாரிக்கண்ணனை  போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர்
காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி கண்ணன்(44).
இவர் 2022ம் ஆண்டு முதல் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் உள்ள
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் பணியாற்றி வரும் பள்ளியில் பயிலும் 12 வயதுடைய சிறுமி ஒருவரை மோட்டார் பைக்கில் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - மே 31ம் தேதி நேரில் ஆஜராக நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்!

சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சிலம்பு பபயிற்சியாளர் மாரிக்கண்ணனை தீவிர தேடுதலுக்கு பின்னர் கைது செய்தனர்.

Tags :
arrestedgirlkovilpattisexually harassedSilambam Coach
Advertisement
Next Article