Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி - குவைத் அரசர் அறிவிப்பு!

11:25 AM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த 24 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். குவைத் தீ வீபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தீவிபத்து குறித்து தகவல்கள் வெளியான உடனே மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்று இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவருவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.  மேலும் குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை சந்தித்து ஆறுதலும் கூறினார்.

அங்கிருந்து 46 இந்தியர்களின் உடல்களும் விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானத்திலேயே மத்திய இணை அமைச்சர் கேவி சிங்கும் கொச்சி வந்தார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தோரின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டு 7 வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்திருந்தார்.

குவைத் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, கேரளா அரசுகள் நிதி உதவிகளை அறிவித்திருந்தன. இந்நிலையில் குவைத் அரசும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதி உதவி (15,000 அமெரிக்க டாலர்) வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

Tags :
Fire accidentKeralaKuwaitNews7Tamilnews7TamilUpdatesRelief FundTamilNadutamils
Advertisement
Next Article