Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

09:54 PM Dec 25, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே வருகிறது. இதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 656 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகரித்து வரும் தொற்றுக்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 11 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆகும். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 139 ஆக இருந்த நிலையில், இன்று 139 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று 4 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
CoronaHealth and Family Welfare DepartmentNews7Tamilnews7TamilUpdatestamil nadu
Advertisement
Next Article