விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப தேமுதிக கட்சியினர் கோயிலில் வழிபாடு...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அக்கட்சியினர் வழிபாடு நடத்தினர்.
கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது . இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிட்டது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அக்கட்சியினர் வழிபாடு நடத்தினர். அவரின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் உட்பட அக்கட்சியினர் பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.