Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய்… #UdhayanidhiStalin சொன்ன பதில்!

04:36 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மோம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நடைபெற்றன. இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்குகீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த சூழலில், தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மோம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தவெக தலைவர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள்."

இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மோம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
news7 tamilperiyarThalapathythalapathy vijaytvkTVK VijayUdhayanidhi stalinvijay
Advertisement
Next Article