Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரை கூட்டம் தொடக்கம்...!

டெல்லி வெடிவிபத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
06:13 PM Nov 12, 2025 IST | Web Editor
டெல்லி வெடிவிபத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 20 திற்கும் மேற்பட்டோர் டெல்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பூட்டான் அரசுப் பயணத்தையடுத்து இன்று  நாடு திரும்பியுள்ள இந்திய பிரதமர் மோடி டெல்லி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Tags :
CCSmeetingDelhidelhicarblastlatestNewsPMModi
Advertisement
Next Article